Tuesday, May 26, 2009

காகித ஆட்சி




பிறந்த இடம் அறிவோம்,
பிறந்ததினால் அழியும் இடம் அறியாது,
அழிந்தப்பின் போகும் இடம் புரியாது.



பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் ஒரு வாழ்கை,

ஆசைப்படும் வாழ்க்கை அல்ல,

கட்டாய வாழ்கை.


அருகினில் இருக்கும் உனது பெற்றோர், உறவினர், நண்பர், மனைவி, பிள்ளை...

இத்தனையும் தாண்டி ஓர் உறவை நீ தேடுவாய்,

நீ வசிக்கும் இடத்தில் பல வித குறைகள் இருப்பதை நீ அறிவாய்...



பிறந்தோம், படித்தோம், பணம் எடுத்தோம், சாதித்தோம், இறந்தோம்...

அனைத்திலும் பங்கெடுத்த நீ, உன்னை மறந்தாய் என்பதே உண்மை...

புரியவில்லை?


எழுந்தாயா, குளித்தாயா, உண்டாயா, சில பல கடமைகளையும்
கட்டாயங்களையும் செய்தாயா, மறுபடியும் உறங்கும் நீ செய்யும் அத்துனை
விஷயங்களும் உன் உடலுக்காகவும், அடுத்த நிமிஷ வாழ்க்கைக்காகவும்,
மற்றோருக்கும் செய்கிறாய் ஒழிய உனது மனதிற்கு செய்ய மறந்தாய்
என்பதை சொல்கிறேன்...


இத்தனை நாட்களாய் வாழ்கிறாயே...ஒன்றினை உணர்ந்தாயா?
பணத்தை படைத்ததினால் தானே நீ இவ்வளவு கஷ்டப்படுகிறாய்...என்பதை...
உனது வாழ்க்கையை கட்டாயப்படுத்தி விட்டது ஒரு காகிதம்...


ஒவ்வொரு நிமிடமும் வாழ்கிறாயா என்பதை சிந்தனை செய்?
என்று நீ சுவாசிப்பதை ரசிக்கிராயோ...அந்த ஒரு நொடிகளாவது
வாழ்ந்திருக்கிறாய் என்ற சந்தோஷம் கிட்டட்டும்...


~பரதன்~