
பிறந்துவிட்டேன் இவ்வுலகில்; படைத்ததோ இருவர்;
கண் சாய்ந்த நேரத்தில் மறைந்துவிட்டார் ஒருவர்,
இறைவன் படைத்த மிகப்பெரிய தவறு-மனது-இனால்
ஏற்றுக்கொள்ள முடியாமல் கதறி அழுகிறது...
கண் சாய்ந்த நேரத்தில் மறைந்துவிட்டார் ஒருவர்,
இறைவன் படைத்த மிகப்பெரிய தவறு-மனது-இனால்
ஏற்றுக்கொள்ள முடியாமல் கதறி அழுகிறது...
பிறந்தவர் இறப்பதும்; இறப்பவர் பிறப்பதும்;
ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்பது நியதியாயிற்று,
கூறியதோ கீதையில் - ஓர் உயிர் எழுதிய உயிரில்லா வாசகம்,
அவ்வுயிருக்கும் எனக்கும் வித்தியாசமுண்டு...
ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்பது நியதியாயிற்று,
கூறியதோ கீதையில் - ஓர் உயிர் எழுதிய உயிரில்லா வாசகம்,
அவ்வுயிருக்கும் எனக்கும் வித்தியாசமுண்டு...
முழுமை அன்பு வைத்திருப்போர் இவ்வுலகில் இருந்தும்,
பிரிந்திருப்பதை ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம்...
இறந்து உடன் இருப்பது ஏற்றுக்கொள்ளலாகாது,
நிகழ்ந்தது எமது வாழ்கையில்...
பிரிந்திருப்பதை ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம்...
இறந்து உடன் இருப்பது ஏற்றுக்கொள்ளலாகாது,
நிகழ்ந்தது எமது வாழ்கையில்...
நல்லதோர் வீணை செய்தேன்...
அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ...
சொல்லடி சிவசக்தி, எனது தந்தையின் நல்லுயிரை எம்மைவிட்டுப்
பறித்துச் சென்றது என்?
அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ...
சொல்லடி சிவசக்தி, எனது தந்தையின் நல்லுயிரை எம்மைவிட்டுப்
பறித்துச் சென்றது என்?
இதுவரை பார்க்கா சொந்தம் கூடியிருந்த அந்நாள்,
இன்னும் என் கண்முன்...தேவையில்லை எனக்கு...
நுனியளவு சிரிப்புப் புன்னகையோடு, என் தலையை தடவி,
ஐயா என செல்லமாய் அழைக்கும் அந்த உயிர் வேண்டும்...
இன்னும் என் கண்முன்...தேவையில்லை எனக்கு...
நுனியளவு சிரிப்புப் புன்னகையோடு, என் தலையை தடவி,
ஐயா என செல்லமாய் அழைக்கும் அந்த உயிர் வேண்டும்...
கடைசி மூச்சை உணர்ந்து, கைப்பற்றி அழுது, எண்ணெய் தடவி,
அரிசி போட்டு, மொட்டை அடித்து கழுவிவிட்டேன்...
எனது பக்கத்தில் அமர்ந்து தொடர்ந்து பார்கிராயே,
உன்னை தொட முடியாமல் கசியும் மனதுதிரத்திர்க்கு மருந்தில்லை...
அரிசி போட்டு, மொட்டை அடித்து கழுவிவிட்டேன்...
எனது பக்கத்தில் அமர்ந்து தொடர்ந்து பார்கிராயே,
உன்னை தொட முடியாமல் கசியும் மனதுதிரத்திர்க்கு மருந்தில்லை...
அவளது மஞ்சள் முக மலர்ச்சி, சிவப்பு வர்ணப்புடவை,
வளையல்கள் நிறைந்த கைகள், மகாலக்ஷ்மி வந்தது போல் இருக்கும்,
எனது அன்னையின் வரவு கறுப்புப் புள்ளியோடு முடிவடைந்தது,
நீர் இல்லா காரணத்திற்காக...
வளையல்கள் நிறைந்த கைகள், மகாலக்ஷ்மி வந்தது போல் இருக்கும்,
எனது அன்னையின் வரவு கறுப்புப் புள்ளியோடு முடிவடைந்தது,
நீர் இல்லா காரணத்திற்காக...
சொந்த இள கனவில், கண் சாய்ந்த நொடியில்,
முகப்பரு வலிக்க சாய்ந்திருந்த உனது மடிகள்,
உடல் வலிக்க மண்ணுக்குள், உம் படத்தை கையிலேந்தி,
சமர்பித்தேன் கண்ணீர்களை உரமாக...
முகப்பரு வலிக்க சாய்ந்திருந்த உனது மடிகள்,
உடல் வலிக்க மண்ணுக்குள், உம் படத்தை கையிலேந்தி,
சமர்பித்தேன் கண்ணீர்களை உரமாக...
உமது பாதம் பதித்த பயணத்தை பார்த்த நான் இப்போது
பயணிக்கிறேன் நீ இல்லாமல்...ஆனால் ஒரு கால் குறைகிறது...
போகும்போது கண்டிப்பாக எண்ணெய் எதிர்பார்த்திருப்பாய்...
நான் உன் அருகில் இல்லாதது பெருங்காயம்...
பயணிக்கிறேன் நீ இல்லாமல்...ஆனால் ஒரு கால் குறைகிறது...
போகும்போது கண்டிப்பாக எண்ணெய் எதிர்பார்த்திருப்பாய்...
நான் உன் அருகில் இல்லாதது பெருங்காயம்...
இன்னமும் வீட்டில் உள்தாப்பா போடா உறங்குகிறேன்...
நீ வருவாய் என....
நீ வருவாய் என....