சிறு வயது ஞாபகங்கள் என்னை தளவியது...
நாள்தோறும் உமது கையில் இருக்கும் ரோமங்களை தடவிப் பார்ப்பதே எமது வேலை...
எனது குட்டி கை விரல்கலை முகர்ந்து பார்ப்பது உமது வேலையாயிற்று...
உமது மார்பில் படுத்து உறங்கிய நினைவுகள்...
இப்போதும் என் தலையணையை அலுத்திபிடித்துக் கொண்டு நினைத்திருப்பேன்...
ரீங்கார தொலைப்பேசி மூலம் தகவல் கொடுத்து காத்திருப்பேன்...
வேலை முடிந்து வரும் பொழுது உணவுகள் ஏதும் வாங்கி வருவார் என்று...
தாமதமாகி விட்டதன் மூலம் உறங்கி விடும் எமது விழிகள்....
மோட்டார் சப்தம் செவியை துளைத்ததும் விழித்த கண்கள் தேடும் உன் முகம் எங்கே என்று...
நினைவு தெரிந்த நாள் முதல் அடித்ததில்லை உமது கரங்கள் என்னை...
எல்லாம் செய்து கொடுத்தீர்...உம்மை விட்டு மூன்று வருடம் பிரிய வேண்டிய சூழ்நிலை...
உன்னை நினைக்கா நாளில்லை...
அங்கேயும் அப்டித்தான் என்று நான் அறிவேன்...
திடுக்கிட்டது ஒரு நாள்...
அந்த சம்பவம் என் வாழ்வில் மறக்க முடியாதது...
உம்மை பிரிந்து விடுவேனோ என்று என் உள்ளம் கேட்டது...
வேண்டாத தெய்வமில்லை...
நீர் என்னை கண் விளித்து பார்த்தும்...எனக்கு உயிர் வந்தது...
சிரித்தேன்...மகிழ்ந்தேன்...
பொறுக்கவில்லை அவனுக்கு......
மறுபடியும் இன்னொரு கண்டம்...
கடைசியாக உமக்கு முத்தம் தந்து பிரிந்த ஞாபகம் கண்முன் நினைவுகள்...
வேண்டுகிறேன் இறைவனை...
நீர் என் வாழ்வில் கடைசி வரை இருக்க வேண்டுமென்று...
நீர் இல்லாத வாழ்கையை நினைத்து பார்க்க முடியவில்லை...
இதுவரை என்னை சந்தோஷப்படுத்திவிட்டு... கலங்க்கப்படுத்திவிடாதீர்கள்...
நினைவில் அல்ல... நிஜத்தில் இருக்க வேண்டும்... என்றும் என்னுடன்... அப்பா...
~பரதன்~
